TNPSC Thervupettagam

பஞ்சாப் – வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டம்

March 9 , 2025 22 days 65 0
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF) திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய 4,713 கோடி ரூபாய் தொகையினையும் பஞ்சாப் மாநில அரசு பயன்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம், இந்தத் திட்டத்தினை நன்கு செயல்படுத்துவதில் பஞ்சாப் மாநிலமானது இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • AIF ஆனது, அறுவடைக்குப் பிந்தைய ஒரு நிலைமையில் மிகத் தேவையான வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வேண்டி நடுத்தர மற்றும் நீண்ட கால நிதியுதவி வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • பிப்ரவரி 28 ஆம் தேதி நிலவரப்படி, 21,740 திட்டங்களுடன், அதிக எண்ணிக்கையிலான அனுமதிக்கப்பட்ட திட்டங்களைக் கொண்டு பஞ்சாபானது நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, தகுதியான கடன்களுக்கு 3% வட்டி மானியத்தை வழங்குகிறது.
  • 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 7 ஆண்டுகளுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்