TNPSC Thervupettagam

பஞ்ச்முலி ஏரி மற்றும் முதலைகள்

July 7 , 2021 1109 days 621 0
  • குஜராத்தின் நர்மதா மாவட்டத்திலுள்ள ஒற்றுமைக்கான சிலைக்கு அருகிலுள்ள பஞ்ச்முலி என்ற ஒரு  ஏரியிலிருந்து 194 முதலைகள் இடம் மாற்றப் பட்டுள்ளன.
  • பஞ்ச்முலி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இவை இடம் மாற்றப் பட்டுள்ளன.
  • இந்த ஏரியானது கேவடியாவில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 182 மீட்டர் உயர உருவச் சிலைக்கு அருகில் அமைந்துள்ளது.
  • இந்த ஏரியானது சர்தார் சரோவர் அணையின் மூன்றாவது நீர்வழியாகவும் (முகடு – 3) அறியப் படுகிறது.
  • ஒற்றுமைக்கான சிலையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக வேண்டி இந்த ஏரியானது மேம்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்