கேந்திரப்பரா மாவட்டத்தின் பித்தர்கனிகா தேசியப் பூங்கா பிராந்தியத்தில் தொலைதூரப் பகுதிகளில் வாழும் கிராம மக்களுக்காக படகு மருத்துவ ஊர்தி சேவையை 2019 ஆம் ஆண்டு மார்ச் 05 அன்று ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.
இந்தப் படகு மருத்துவ ஊர்தியின் மூலம் நதி மற்றும் கரையோரப் பகுதி கிராமங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.
இந்த மருத்துவ ஊர்தி சேவையானது அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடியது. மேலும் இதில் தேவையான மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், அம்மாநில அரசு நதிப் புறங்களில் மேலும் 6 படகு மருத்துவ ஊர்திகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
பித்தர்கனிகா தேசியப் பூங்கா
பித்தர்கனிகா தேசியப் பூங்காவானது பித்தர்கனிகா வனவிலங்கு சரணாலயத்தின் மையப் பகுதியாகும். இது ஒடிசா மாநிலத்தின் கேந்திரப்பரா பகுதியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக் காடுகள் பித்தர்கனிகா ஆகும்.
இதன் நீர் நிலைகள் ஏறத்தாழ 1800 கழிமுக முதலைகளின் வாழிடமாகத் திகழ்கிறது.