TNPSC Thervupettagam

படைப்பிரிவுகளுக்கு இடையேயான கடல்சார் பாய்மரக் கப்பல் பந்தயம் 2023

December 10 , 2023 221 days 172 0
  • இந்தியக் கடற்படையானது, படைப்பிரிவுகளுக்கு இடையேயான 2வது கடல்சார் பாய்மரக் கப்பல் பந்தயத்தினை (2023) கொச்சியில் உள்ள கடற்படைத் தளத்தில் தொடங்கியது.
  • இந்தப் பந்தயம் ஆனது கொச்சியில் இருந்து கோவா வரை நடைபெற உள்ளது.
  • இது புது டெல்லியில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் அமைந்த இந்திய கடற்படை கடற்பயணச் சங்கத்தின் (INSA) கீழ் தெற்கு கடற்படைப் படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தப் பந்தயத்தில் புல்புல், நீலகந்த், கடல்பூர் மற்றும் ஹரியால் என்ற நான்கு 40-அடி இந்தியக் கடற்படை பாய்மரக் கப்பல்கள் (INSVs) இடம் பெற்றுள்ளன.
  • இதில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலினத்தினைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் ஆகியோரை உள்ளடக்கிய கலப்புக் குழு பங்கு பெறுவதால் இந்த ஆண்டு பந்தயம் முற்றிலும் வேறுபட்டது ஆகும்.
  • இது பாலின மற்றும் சமத்துவ நடுநிலைமையை அடையாளப்படுத்தி, அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்