இந்திய விமானப்படை படைப் பிரிவுத் தலைவர் ஷாலிசா தாமியை மேற்குப் பிரிவின் முன்னணி போர்ப் பிரிவின் தலைமைப் பொறுப்பினை ஏற்பதற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இவர் பாகிஸ்தான் நாட்டினை எதிர்கொள்ளும் வகையில் அமைந்த மேற்குப் பிரிவின் ஏவுகணைப் படைப் பிரிவிற்குத் தலைமை தாங்க உள்ள இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரி ஆவார்.
இந்திய விமானப் படையின் ஒரு படைப் பிரிவுத் தலைவர் என்பது இராணுவத்தில் கர்னல் பொறுப்பிற்குச் சமமானதாகும்.
இந்திய இராணுவத்தில் அதிக எண்ணிக்கையாக 1,705 பெண் அதிகாரிகளும், இந்திய விமானப் படையில் 1,640 பெண் அதிகாரிகளும், இந்தியக் கடற்படையில் 559 பெண் அதிகாரிகளும் உள்ளனர்.