மங்கோலிய நாட்டுப் புத்தப் பூர்ணிமாவை முன்னிட்டு, மங்கோலியாவின் காந்தன் மடாலயத்தின் மைதானத்தில், பட்சகன் கோயிலின் 12 நாட்கள் அளவிலான ஒரு கண்காட்சி நடைபெற்றது.
புத்தப் பெருமானின் நான்கு புனித நினைவுச் சின்னங்கள் இந்தக் கண்காட்சியில் 12 நாட்கள் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் அவை மீண்டும் இந்தியாவிற்கு வந்தடைந்தன.
மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால், காஜியாபாத்தில் இந்தப் புனித நினைவுச் சின்னங்களைப் பெற்றுக் கொண்டார்.
மங்கோலிய மக்களின் கோரிக்கையின் பேரில் நினைவுச் சின்னங்களை காட்சிப் படுத்தப் படுவதற்கான கால அவகாசத்தினை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டியிருந்தது.
இந்த நினைவுச்சின்னங்கள் 'கபில்வஸ்து நினைவுச் சின்னங்கள்' என்று அழைக்கப் படுகின்றன.
இவை பண்டைய காலத்து கபிலவஸ்து நகரமாக நம்பப்படுகின்ற, பீகாரில் உள்ள ஒரு தளத்திலிருந்து 1898 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டெடுக்கப்பட்டவையாகும்.
இவற்றிற்கு அரசு விருந்தினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.