TNPSC Thervupettagam

பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் ஆணையம்

October 21 , 2021 1009 days 590 0
  • தமிழக அரசானது பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் ஆணையத்திற்கான உறுப்பினர்களை நியமித்தது.
  • உயர்நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் இந்த ஆணையத்தின் தலைவராக செயல்படுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
  • தலித் முரசு என்ற இதழின் ஆசிரியர் புனித பாண்டியன் இந்த ஆணையத்தின் துணைத் தலைவராக செயல்படுவார்.
  • இந்த ஆணையத்தில் மேலும் 5 உறுப்பினர்கள் இடம் பெறுவர்.
    • வழக்கறிஞர் குமாரதேவன்,
    • எழில் இளங்கோவன் (ஒரு எழுத்தாளர்),
    • லீலாவதி தனராஜ், (பழங்குடியின மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதில் ஈடுபட்டுள்ள சமூக  ஆர்வலர்)
    • வழக்கறிஞர் இளஞ்செழியன் மற்றும்
    • பேராசிரியர் ரகுபதி
  • இந்த ஆணைய உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும்.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினரின் சட்ட உரிமைகள் பாதுகாக்கப் படுவதை இவர்கள் உறுதி செய்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்