புது டெல்லியில் பட்டுக் குறியீட்டு அமைப்பு கண்காட்சியானது தொடங்கப்பட்டது.
ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்தியப் பட்டு வாரியத்தின் கீழ் உள்ள இந்தியப் பட்டுத் தர நிர்ணய அமைப்பினால் இந்தக் கண்காட்சியானது ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பட்டுக் குறியீடு என்பது நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான மற்றும் தூயப் பட்டுகளின் தரத்தைத் தீர்மானிக்க அரசாங்கத்தினால் தொடங்கப்பட்ட ஒரு தர உத்தரவாத முத்திரை ஆகும்.
பட்டுக் குறியீட்டு முத்திரையானது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில் நுகர்வோரின் நம்பிக்கையை உருவாக்குகின்ற, பட்டு உற்பத்திப் பொருட்களின் தரங்களை எடுத்துக் காட்டுகிறது.