சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளானவை பொருளாதாரப் பெருவழிப் பாதைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பட்டை மற்றும் சாலை முன்னெடுப்பின் கீழ் (Belt and Road Initiative - BRI) 33 புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
மேலும், க்யுக்பியு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு ஆழமான துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்த இரு நாடுகளாலும் சலுகை ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
BRI பற்றி
இத்திட்டமானது சீனாவை இந்தியப் பெருங்கடலை எளிதில் அணுகுவதற்கு அனுமதிக்கின்றது.
ஏனென்றால், சீனா பெரும்பாலும் அதன் எண்ணெய்த் தேவைகளை இறக்குமதி செய்கின்ற மலாக்கா ஜலசந்தியை இந்தப் பாதையானது கடந்து செல்கிறது.
இது சீனாவின் முத்து வளைய (String of Pearls) திட்டங்களுக்கு உதவுகின்றது.
மலாக்கா ஜலசந்தியானது அந்தமான் கடலையும் தென் சீனக் கடலையும் இணைக்கின்றது.