TNPSC Thervupettagam

பண வழங்கீட்டுக் கடவுக் குறியீட்டுச் சேவை

September 8 , 2024 28 days 64 0
  • மாஸ்டர்கார்டு நிறுவனமானது அதன் புதிய பண வழங்கீட்டுக் கடவுக் குறியீட்டுச் சேவையை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இயங்கலை வழியிலான பொருள் வாங்கல் நடவடிக்கைகளை முன்பு இருந்ததை விட பாதுகாப்பானதாகவும் எளிதாகவும் மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சேவையானது, நாட்டின் மிகப் பெரிய சில பண வழங்கீட்டு நிறுவனங்களுடன் இணைந்து சோதனை முறையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பண வழங்கீட்டு (கட்டண) கடவுக் குறியீடுகள் கைரேகைகள் அல்லது முக அடையாள அங்கீகாரம் போன்ற சாதனங்கள் அடிப்படையிலான சில உயிரியளவியல் பதிவு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
  • இவை பாரம்பரியக் கடவுச்சொற்கள் மற்றும் ஒற்றைப் பயன்பாட்டுக் குறியீடுகளுக்கு மாற்றாக அமைகின்றன.
  • கடவுக் குறியீட்டுச் சேவையானது பரிவர்த்தனைகளை மிக விரைவாக மட்டுமின்றி, மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மிகப் பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்