TNPSC Thervupettagam

பணப்பரிசு சார்ந்த விளையாட்டுகளுக்கான விதிமுறைகள்

February 11 , 2025 12 days 52 0
  • தமிழ்நாடு இயங்கலை வழி விளையாட்டு ஆணையம் ஆனது, பணப்பரிசு சார்ந்த இயங்கலை வழி விளையாட்டுகளை மேலாண்மை செய்யும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயங்கலை வழி விளையாட்டு ஆணையம் (பணப்பரிசு சார்ந்த இயங்கலை வழி விளையாட்டுகள்) விதிமுறைகள் ஆனது, 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் இந்த இயங்கலை வழியிலான பணப் பரிசுகள் சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவதைத் தடை செய்கிறது.
  • இந்த விதிமுறைகளின்படி, அந்தச் செயலிகளில் ஒரு கணக்கு உருவாக்கத்திற்கு என்று வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுதல் (KYC) சரிபார்ப்பு அவசியமாகும்.
  • ஆரம்ப உள்நுழைவு ஆனது, கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப் படும் ஒரு முறை பயன்படுத்தப்படக் கூடிய கடவுச்சொல் உட்பட, ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • பணப்பரிசு சார்ந்த இயங்கலை வழி விளையாட்டுகள் நள்ளிரவு முதல் காலை 5 மணி வரையில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்பதோடு இந்த நேரங்களில் எந்த உள்நுழைவுகளும் அனுமதிக்கப்படாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்