நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் பத்ம விருதுகளை அறிவித்தது.
இந்த விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப் படுகின்றன.
பத்ம விபூஷன் (தனித்துவமிக்க மற்றும் சிறப்பான சேவை),
பத்ம பூஷன் (உயர் நிலையில் சிறப்பான சேவை), மற்றும்
பத்மஸ்ரீ (சிறந்த சேவை).
பொதுச் சேவையில் சம்பந்தப்பட்ட அனைத்துச் செயல்பாடுகள் அல்லது துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷண், 17 பத்ம பூஷண் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் ஆகியவை உள்ளடங்கும்.
இந்த விருது பெற்றவர்களில் 34 பேர் பெண்கள் ஆவர்.
இந்தப் பட்டியலில் வெளிநாட்டினர்/வெளிநாடு வாழ் இந்தியர்கள்/இந்திய வம்சாவளியினர்/ வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பிரிவில் இருந்து 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள் 13 பேர் ஆகியோர் உள்ளடங்குவர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.