“பனிச் சிறுத்தை” என்று வெகுவாக அறியப்படும் அங் ரிட்டா ஷெர்பா அவர்கள் வெற்றிகரமான மலையேறுபவராக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் ஆல்பைன் இமயமலைப் பகுதிகளின் பாதுகாப்பு குறித்து இமயமலைப் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
இவர் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் இமயமலைச் சூழலமைப்பின் பாதுகாப்பு குறித்த தனது முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் சர் எட்மண்ட் ஹிலாரி மலைப் பிரதேச விருதை வென்றுள்ளார்.
இவர் செயற்கை ஆக்ஸிஜன் வாயுவின் துணை இல்லாமல் அதிக முறை இமயமலை ஏறியதற்காக கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழை வென்றுள்ளார்.