TNPSC Thervupettagam
October 27 , 2021 1003 days 575 0
  • ரேஷன் (பொது விநியோகக் கடை) கடைகள் மூலம் கற்பகம் என்ற பெயரின் கீழ் பனை வெல்லத்தினை விற்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • பொது விநியோக கடைகளின் மூலம் பனை வெல்லத்தினை விற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக மாநில அரசு தனது வேளாண் பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
  • பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை என்ற பெயரின் கீழ் பனை வெல்லத்தினை விற்பனை செய்வதற்கான ஒரு திட்டத்தினையும் திரு ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • மேலும் அவர் tnkhadi என்ற செயலி உள்பட கைத்தறி, கைவினைப் பொருட்கள், நெசவு மற்றும் காதித் துறைகளின் கீழ் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
  • Tnkhadi என்ற செயலியானது தீபாவளியின் போது சிறப்பு விற்பனைக்காக காதி கைவினைப் பொருட்கள் மற்றும் தமிழ்த்தறி எனப்படும் பட்டுப்புடவைகள் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்