முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட ஒரு பன்றியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறுநீரகத்தினை ஒரு மனித நோயாளிக்கு வைக்கும் அறுவைச் சிகிச்சையினை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
ஆல்ஃபா-கால் (alpha-gal) என்ற ஒரு சர்க்கரை மூலக்கூறினை உற்பத்தி செய்யாத வகையில் மரபணு மாற்றப்பட்ட ஒரு பன்றியிடமிருந்து இந்தச் சிறுநீரகத்தினை அறிவியலாளர்கள் பெற்றனர்.
ஆல்ஃபா-கால் மனித நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி, உடல் உறுப்பினை நிராகரித்திட உடலினைத் தூண்டும்.
மேலும் சிறுநீரகம் பொருத்தப்பட்டவரின் உடல் உடனடியாக அந்த சிறுநீரகத்தை நிராகரிக்க வில்லை.
மேலும், சிறுநீரகம் இணைக்கப்பட்ட பல மணி நேரங்களுக்கு அது சாதாரணமாக செயல்பட்டது.