TNPSC Thervupettagam

பயிர்கள் மீதான காசநோய் மருந்துகளுக்குத் தடை

May 15 , 2020 1529 days 754 0
  • சமீபத்தில், மத்தியப் பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவு ஆணையமானது  (CIBRC - Central Insecticides Board and Registration Committee) நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளான ஸ்ட்ரெப்டோமைசின் மற்றும் டெட்ராசைக்கிளினின் போன்ற மருந்துகளின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப் பரிந்துரை செய்துள்ளது.
  • ஸ்ட்ரெப்டோமைசின் ஆனது முன்னதாக காசநோய் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான ஒரு முக்கியமான பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
  • மேலும் இது பலமருந்து எதிர்ப்பு காசநோய் நோயாளிகளுக்கும் மெனின்ஜிட்டிஸ் காசநோய் (மூளைக் காசநோய்) போன்ற சில வகை நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கும் பயன்படுத்தப் படுகின்றது.
  • ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு ஆட்படும் போது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் அது நோய் எதிர்ப்புத் தடைகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது.
  • CIBRC ஆனது பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக 1970 ஆம் ஆண்டில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தால் ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்