TNPSC Thervupettagam

பருவநிலை இடர் குறியீடு 2025

February 16 , 2025 6 days 76 0
  • இந்தியா தனது பருவநிலை இடர் குறியீட்டு (CRI) தரவரிசையை 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளால் உலகளவில் ஏழாவது மோசமாக பாதிக்கப் பட்ட நாடு என்ற நிலையிலிருந்து, 2022 ஆம் ஆண்டில் 49வது இடத்திற்கு மேம்படுத்தி உள்ளது.
  • இருப்பினும், பல ஆண்டுகளாக மிகவும் நீண்ட கால (1993-2022) மதிப்பீட்டில் ஆறாவது மோசமான நாடாக இந்தியா கருதப்படுவதன் மூலம் மிகவும் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
  • இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன் வாட்ச் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு CRI அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
  • 30 ஆண்டுகளில் (1993-2022) பதிவான சுமார் 400 தீவிர வானிலை நிகழ்வுகளில் 80,000 உயிரிழப்பு மற்றும் சுமார் 180 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
  • உலகளவில், 2022 ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு காலக் கட்டத்தில் ஏற்பட்ட 9,400க்கும் மேற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளால் 7,65,000க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.
  • இது மொத்தம் 4.2 டிரில்லியன் டாலர் (பணவீக்கத்திற்கு ஏற்ப ஈடு செய்யப் பட்டது) பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தியது.
  • 1993-2022 ஆகிய காலக் கட்டத்தில் ஏற்பட்டப் புயல்கள் (35%), வெப்ப அலைகள் (30%) மற்றும் வெள்ளம் (27%) ஆகியவை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தின.
  • இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகியவை கடந்த 30 ஆண்டுகளாக உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட சுமார் 10 நாடுகளில் இடம் பெற்ற மூன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும்.
  • 1993-2022 ஆம் ஆண்டு பட்டியலில் டொமினிகா, சீனா, ஹோண்டுராஸ், மியான்மர் மற்றும் இத்தாலி ஆகியவை மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகள் ஆகும்.
  • இந்தியா 1993, 1998 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பேரழிவுகரமான வெள்ளத்தையும், 2002, 2003 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கடுமையான வெப்ப அலைகளையும் எதிர் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்