உலக வானிலை அமைப்பானது இந்த அறிக்கையினை வெளியிட்டது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பருவ நிலை மாற்றமானது வெள்ளப் பெருக்கு மற்றும் வறட்சி போன்ற நீர் சம்பந்தமான இடர்களை அதிகரிக்கிறது.
நீர் பற்றாக்குறையால், பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையையும் பருவநிலை மாற்றம் அதிகரிக்கச் செய்கிறது.
புவியிலுள்ள நீரில் 0.5 சதவீதம் மட்டுமே உபயோகிக்கத் தக்கது என்பதாலும் மற்றும் அது நன்னீர் என்பதாலும் இந்த நிலைமை மோசம் அடைந்து வருவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.