TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உரிமை

April 13 , 2024 97 days 144 0
  • இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது, முதன்முறையாக, பருவநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களுக்கு எதிரான உரிமையை அங்கீகரித்துள்ளது.
  • இந்த உரிமையானது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வு உரிமை மற்றும் சமத்துவ உரிமை ஆகியவற்றுடன் ஒன்றிணைந்துள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
  • 21வது பிரிவானது வாழ்வு உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திர உரிமையினை அங்கீகரிக்கிற அதே சமயம் 14வது சட்டப் பிரிவு ஆனது, சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமம் மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.
  • இந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் ஆனது தூய்மையான சுற்றுச் சூழலுக்கான உரிமை மற்றும் பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுக்கு எதிரான உரிமை ஆகியவற்றின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியது.
  • அரசியலமைப்பின் 48A சட்டப் பிரிவு ஆனது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், நாட்டிலுள்ள காடுகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது.
  • காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும், உயிரினங்கள் மீது கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று 51Aவது சட்டப் பிரிவின் உட்பிரிவு (g) கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்