ஐக்கிய நாடுகளின் பருவநிலை அறிவியல் குழுமமானது பருவநிலை மாற்றம் நமக்கு அப்பாற்பட்டதாக உள்ளதாகவும் மனிதச் சமூகம் அதற்குத் தயார் நிலையில் இல்லை என்றும் தனது முக்கிய அறிக்கையில் எச்சரித்தது.
உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பருவநிலையின் தாக்கத்தின் ஏற்கனவே அபாயகரமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறி ஒரு மாபெரும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.
2040 ஆம் ஆண்டுக்குள், இந்தப் பருவநிலை மாற்றமானது உலகைப் பசி நிறைந்த ஒன்றாகவும், நோய்கள் மிக்கதாகவும், மிக அபாயகரமான ஒன்றாகவும், இடர்களை அதிகரித்து மிகுந்த ஏழ்மை மிக்கதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், மனிதனால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு மட்டுப்படுத்தப் படா விட்டால், பூமியானது 127 வழிகளில் சிதைந்து விடும்.
தற்போது இது கொடிய தீ விபத்துகள், வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளங்கள் போன்ற சில முக்கிய மீள முடியாத நிகழ்வுகளால் வழக்கமாக ஒரு தொடர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றது.