TNPSC Thervupettagam

பலபரிமாண வறுமைக் குறியீடு

March 28 , 2019 1975 days 692 0
  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme - UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு முன்னெடுப்பு ஆகியவை இணைந்து வருடாந்திர உலக பலபரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • வறுமையானது 3 பரிமாணங்கள் மற்றும் 10 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தனிநபர் நிலையில் கணக்கிடப்படுகின்றது.
  • ஒருவர் கொடுக்கப்பட்ட காரணிகளில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் குறைபாடு உடையவராகக் காணப்பட்டாலும் அவர் வறுமை நிலையில் உள்ளவராகக் கருதப்படுவார்.
  • இந்த அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக தனது வறுமை நிலையை 55 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. 2005-06 மற்றும் 2015-16 இடைப்பட்ட காலகட்டத்தில் 271 மில்லியன் மக்கள் வறுமை நிலையிலிருந்து விலகியுள்ளனர்.
  • இந்தியாவில் பாதிக்கு மேல் வறுமை நிலையில் உள்ள மக்கள் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.
  • உலகெங்கிலும் பலபரிமாண வறுமை நிலையில் உள்ள மக்களில் 33 சதவிகிதம் நபர்கள் துணை சஹாரா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்