2023 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாகக் கருதப்படும் கல்வி நிறுவனங்கள்) விதிமுறைகளானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
மேலும் உயர்தரத்தினை மையமாகக் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு இது வழி வகுக்கும்.
1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டமானது, பல்கலைக்கழகங்கள் அல்லாத பிற கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகக் கருதப் படும் கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தினை வழங்குவதற்கான அதிகாரத்தினை மத்திய அரசிற்கு வழங்குகிறது.
முன்னதாக, இதற்கான விதிமுறைகள் தொகுப்பானது 2010 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டு 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் திருத்தப் பட்டன.
இந்தியாவில் தற்போது சுமார் 170 நிகர்நிலைப் பல்கலைக் கழக நிறுவனங்கள் உள்ளன.