TNPSC Thervupettagam

பழங்குடியினருக்கான நலத் திட்டங்கள் சீராய்வுக் குழு

February 8 , 2019 1990 days 500 0
  • மகாராஷ்டிரா மாநில அரசானது அம்மாநிலத்தில் பழங்குடியினருக்காக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு திட்டங்களை சீராய்வதற்காக 17 உறுப்பினர்கள் கொண்ட குழுவை நியமித்து இருக்கின்றது.
  • இக்குழு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிரஞ்ஜீவி சங்காத்னாவின் தலைவர் விவேக் பண்டிட்டால் தலைமை தாங்கப்படும்.
  • இந்தக் குழு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது, குறைந்தபட்ச ஊதியங்கள், மற்றும் பழங்குடியினருக்கான சரியான வாழ்வாதாரம் போன்றவற்றை ஏற்படுத்திட உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் மீதான ஆய்வை மேற்கொள்ளும்.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசு ஆணையின் படி, இக்குழு பழங்குடியினர் பகுதியில் உள்ள குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை இல்லாமலிருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்.
  • இக்குழு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை தனது சந்திப்புகளை மேற்கொண்டு தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்