TNPSC Thervupettagam

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் எல்லைகள்

May 11 , 2024 68 days 198 0
  • 13 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பழவேற்காடு (புலிகாட்) பறவைகள் சரணாலயத்தின் எல்லைகளை மறுமதிப்பீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.
  • இது அதன் எல்லையிலிருந்து கிராமங்களை விலக்குவதன் மூலம் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தைக் குறைக்கும்.
  • தற்போதைய இயல்புநிலை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்குள் மேற் கொள்ளப் படும் துறைமுக விரிவாக்கத் திட்டம் மற்றும் தொழில்துறைப் பூங்கா ஆகியவை அதன் எதிர்கால செயல்பாடுகளை அச்சுறுத்துகின்றன.
  • 720 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த ஏரியின் பெரும்பகுதி ஆந்திரப் பிரதேசத்திலும், 20 சதவீதத்திற்கும் குறைவான பகுதி தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
  • 1980 ஆம் ஆண்டில், 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் இந்த பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது.
  • இருப்பினும், சரணாலயத்திற்குள் உள்ள பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடும் இறுதி அறிவிப்பு 26Aவது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்