இஸ்லாமாபாத் அருங்காட்சியகமானது புத்தரின் தலையைக் கொண்ட ஒரு அரிய சிலையை, அதன் இருப்பிடத்திலிருந்து மீட்டெடுத்த பிறகு அதனைப் பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது.
கி.பி 3 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த இந்த சிற்பம் பாகிஸ்தானில் முதலாவது இத்தாலிய தொல்பொருள் அகழாய்வுத் திட்டத்தால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டில் இந்த கலைப்பொருள் தோண்டி எடுக்கப் பட்டது. இது கடைசியாக 1997 ஆம் ஆண்டில் ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டது.