TNPSC Thervupettagam

பாகிஸ்தானில் கரியல் (மீன் உண்ணும் முதலை)

May 19 , 2023 428 days 240 0
  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு கரியல் (கவியாலிஸ் கேஞ்செட்டிகஸ்) தென்பட்டுள்ளது.
  • இது 2017 ஆம் ஆண்டில் ராட்கிளிஃப் கோட்டின் இந்தப் பகுதியில் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்ட குழுவினைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
  • எல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஹரிகே சதுப்பு நிலத்தில் இந்தியா கரியல் இன முதலைகளை மீண்டும் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பஞ்சாப் (இந்தியா) அரசாங்கத்தின் திட்டத்தின் மூன்று கட்டங்களின் கீழ் அமிர்தசரஸ், தர்ன் தரண் சாஹிப் மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய மாவட்டங்களில் பாயும் பியாஸ் ஆற்றில் சுமார் 94 கரியல்கள் விடப் பட்டன.
  • இவை பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சம்பல் ஆற்றுப் படுகையில் இருந்து கொண்டு வரப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்