இந்தியாவில் இருந்து போலியோ மருந்துக் குறிப்பான்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முடிவு செய்துள்ளது.
இந்தியா 370வது பிரிவை ரத்து செய்த பின்னர், புது தில்லியுடனான இந்த மருந்து குறிப்பான்கள் மீதான வர்த்தகத்தை பாகிஸ்தான் அரசு பல மாதங்களுக்கு நிறுத்தி வைத்து இருந்தது.
போலியோ குறிப்பான்கள்
உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப் பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு தடுப்பூசி போடப்பட்ட பின்னர், குழந்தைகளின் விரல்களில் குறிப்பதற்காக போலியோ மருந்துக் குறிப்பான்கள் பயன்படுத்தப் படுகின்றன.
போலியோ பற்றி
இந்த நோயானது போலியோ வைரஸால் ஏற்படுகின்றது.
1995 ஆம் ஆண்டில், இந்தியா WHOன் உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியைத் தொடங்கியது. இது 100% போலியோ ஒழிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டதன் மூலம் போலியோவை இந்தியா முற்றிலுமாக ஒழித்துள்ளது.
இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பானது கடைசியாக 2011 ஆம் ஆண்டில் பதிவாகியது.
உலகில் போலியோ நோய் பாதிப்புகள் இன்னமும் மூன்று நாடுகளில் காணப் படுகின்றன.
அந்த நாடுகளாவன: பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான்.