ஸ்ரீ நகரிலுள்ள தால் ஏரி மற்றும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள இதர ஐந்து ஏரிகள், பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
காஷ்மீர் பகுதியிலுள்ள வுலார், தால், நைகீன் ஏரி ஆகியவை மற்றும் ஜம்மு பகுதியிலுள்ள சனாசர், மனாஸ்பல் மற்றும் பூர்மண்டல் ஏரி ஆகியவை பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
பூர்மண்டல் ஏரி சோட்டா காசி எனவும் அழைக்கப்படுகிறது.
ஜம்மு & காஷ்மீர் தலைமைச் செயலாளர் தலைமையிலமைந்த ஜம்மு & காஷ்மீர் ஈரநில ஆணையத்தின் சந்திப்பின் போது இம்முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
ஜம்மு & காஷ்மீரில் வெவ்வேறு ஈரநிலங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986 மற்றும்
ஈரநிலம் (பாதுகாப்பு & மேலாண்மை) விதிகள் ஆகியவற்றின் கீழ்
அவற்றைக் கொண்டு வருவதற்கான ஒரு பரிந்துரையை வழங்குமாறு அதன் தலைமைச் செயலாளர் அதன் வனத்துறைக்கு ஆணையிட்டு உள்ளார்.
அம்மாநில வனத்துறையானது ஈரநிலங்கள் பற்றிய புவிசார்ந்த தரவுகளின் டிஜிட்டல் விவரங்களைத் தயாரித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் உருவாக்குதல் போன்றவற்றிற்கான ஒரு முதன்மை துறையாகும்.