2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க மாநாட்டில் உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட இலட்சிய இலக்குகளை அடைவதில் உலக நாடுகள் அடைந்த முன்னேற்றத்தினைப் பற்றி பாதுகாக்கப்பட்ட கோள் அறிக்கை 2020 எனத் தலையிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது உலகளாவிய ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பான தேசிய புவியியல் சமூக அமைப்பின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் உலக வளங்காப்பு கண்காணிப்பு மையம் மற்றும் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது.
இது உலகம் முழுவதுமுள்ள பாதுகாக்கப்பட்ட மற்றும் வளங்காப்புப் பகுதிகளின் நிலையை மதிப்பிடும் வகையில் ஈராண்டிற்கு ஒருமுறை வெளியாகும் அறிக்கை ஆகும்.