TNPSC Thervupettagam

பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினம் – ஏப்ரல் 11

April 13 , 2021 1235 days 392 0
  • பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினம் இந்திய வெள்ளை நாடா கூட்டிணைவின் (WRAI – White Ribbon Alliance India) ஒரு முன்னெடுப்பாகும்.
  • கர்ப்ப காலத்தில் குழந்தை பிறப்பின் போதான நலம் மற்றும் மகப்பேறு வசதிகளைப் போதுமான அளவில் மகளிர் பெறுவதனை உறுதி செய்வதற்காக இத்தினம் கடைபிடிக்கப் படுகிறது.
  • மேலும் இத்தினம் கஸ்தூரிபாய் காந்தியின் பிறந்த நாளையும் குறிக்கிறது.
  • கஸ்தூரிபாய் காந்தி தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மனைவி ஆவார்.
  • 1800 நிறுவனங்களின் கூட்டமைப்பான WRAI அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசு ஏப்ரல் 11 ஆம் தேதியினைப் பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினமாக அறிவித்தது.
  • பாதுகாப்பான தாய்மைக்கான தேசிய தினத்தை சமூக ரீதியில் அறிவித்த உலகின் முதல் நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்