சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனமானது (International Institute of Strategic Studies - IISS) பல்வேறு நாடுகளின் பாதுகாப்புச் செலவினம் குறித்த தனது அறிக்கையை “இராணுவ இருப்பு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புக்கான உலகளாவியச் செலவினமானது 2019 ஆம் ஆண்டில் 4% அதிகரித்து உள்ளது.
இது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் 2019 ஆம் ஆண்டில் உலகின் முதல் ஐந்து பாதுகாப்புச் செலவினர்களாக தங்கள் நிலைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
IISS பற்றி
1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச நிறுவனமானது ஒரு பிரிட்டிஷ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனமானது கோ டு திங்க் டேங்க் என்ற ஒரு உலகளாவிய குறியீட்டு அறிக்கையில் 10வது சிறந்த நிறுவனமாக இடம் பெற்றுள்ளது.