TNPSC Thervupettagam

பாபர் ஏவுகணை - பாகிஸ்தான்

April 15 , 2018 2290 days 691 0
  • உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவத்தக்க சீர்வேக கப்பல் ஏவுகணையான (Indigenously developed Submarine Launched version of Cruise Missile-SLCM) பாபர்-3 ஏவுகணையை (BABUR Missile) பாகிஸ்தான் கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • பாபர் – 3 ஏவுகணையானது பல்வேறு வகையான ஆயுதங்களை சுமந்து சென்று விநியோகிக்க வல்லதாகும். இது நீருக்கடியிலான கட்டுப்படுத்தப்பட்ட உந்துதல் அமைப்பை (Underwater controlled propulsion) பயன்படுத்துகின்றது.
  • அரபிக் கடலில் பாகிஸ்தானினுடைய கடற்பகுதியின் நீருக்கடியிலான நிலையில்லா நகரும் ஏவு மேடையிலிருந்து (Underwater Dynamic Platform) இந்த ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. பொது வெளியில் புலப்படாத இடத்தில் பொருத்தப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை தாக்கி அழித்தது.
  • நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவவல்ல இந்த பாபர்-III ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்திருப்பது இது இரண்டாவது முறை மட்டுமேயாகும். இதற்கு முன் இதனுடைய முதல் சோதனை 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்