TNPSC Thervupettagam

பாம்பனில் பாசிப் பெருக்கம்

September 13 , 2019 1772 days 714 0
  • பாம்பனில் உள்ள குந்துக்காலுக்கும், மன்னார் வளைகுடாவில் உள்ள வேதாளைக்கும் இடையில் உள்ள 10 கி.மீ தொலைவுள்ள கடற்கரையானது பச்சை நிறமாகி மிகப்பெரிய மீன் இறப்புகளைக் கண்டுள்ளது.
  • மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமானது அங்கு சோதனைகளை நடத்தி, அங்கு ‘நாக்டிலுகா கடல் நுண்பாசிகள்’ திடீரென பெருகியது இந்த நிகழ்விற்குக் காரணம் என்று முடிவு செய்தது.
  • கடல் நீரில் உள்ள அதிக வெப்பநிலை மற்றும் நல்ல கரிம நிலைமைகள் ஆனது, ‘பச்சைப் பாசிகள்’ இனப்பெருக்கம் செய்வதற்கும் சிதல்களை விடுவிப்பதற்கும் உகந்த சூழலை வழங்கியிருந்தன.
  • மீன்கள் ‘செவுள் மூச்சுத் திணறல்’ காரணமாக அங்கு இறந்துவிட்டன. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவை இறந்துவிட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்