இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான 2019 ஆம் ஆண்டின் பாரத ரத்னா விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கினார்.
மேலும் இவ்விருதானது மறைந்த ஆர்எஸ்எஸ் சிந்தனையாளரான நானாஜி தேஷ்முக் மற்றும் மறைந்த பாடகர் பூபென் ஹசாரிக்கா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான இராஜேந்திர பிரசாத்தின் ஆணையின் மூலம் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா ஏற்படுத்தப்பட்டது.