இந்த மசோதாவானது, வழக்கற்றுப் போன 1872 ஆம் ஆண்டு இந்தியச் சாட்சியச் சட்டத்தினை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அந்தச் சட்டத்தின் 23 விதிகளை மாற்றியமைத்ததோடு, மேலும் ஒரு புதிய விதியை அதில் அறிமுகப் படுத்தியுள்ள நிலையில், அவற்றோடுச் சேர்த்து இந்த மசோதாவில் மொத்தம் 170 சட்டப் பிரிவுகள் உள்ளன.
இந்தப் புதிய மசோதாவானது, மின்னணு அல்லது எண்ணிமப் பதிவுகளை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.
இந்த மசோதாவானது இரண்டாம் நிலை ஆதாரங்களின் (அசலான சில ஆதாரங்களில் இருந்து தருவிக்கப்பட்டவை) வரம்பினை விரிவுபடுத்துகிறது.
இது குற்றவியல் வழக்குகளின் விசாரணையின் போது சாட்சியங்களைக் கையாளச் செய்வதற்கான துல்லியமான மற்றும் சீரான விதிகளை நிறுவுகிறது.