TNPSC Thervupettagam

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு

March 28 , 2025 5 days 40 0
  • 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் (பின்னோக்கிய தேதியில்) அமலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் அவர் ஓய்வூதியங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
  • மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியம் ஆனது, தற்போது 1 லட்சம் ரூபாயில் இருந்து 1.24 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • முன்னதாக 2,000 ரூபாயாக இருந்த தினப்படி ஆனது 2,500 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.
  • மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப் படும் ஓய்வூதியம் ஆனது, தற்போது 25,000 ரூபாயில் இருந்து 31,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய நபர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டிற்கும் வழங்கப் படும் கூடுதல் ஓய்வூதியம் 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
  • அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆண்டிற்கு 34 இலவச உள்நாட்டு விமானப் பயணங்களையும், தொழில்முறை மற்றும் தனிப்பட்டப் பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் வேண்டி முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்யும் ஒரு வாய்ப்பினையும் பெறுகின்றனர்.
  • பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டுதோறும் 50,000 அலகுகள் மின்சாரத்தினையும் மற்றும் 4,000 கிலோ லிட்டர் தண்ணீரையும் இலவசமாகப் பெறுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்