உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி-லலித்பூர் பாராளுமன்றத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுராக் சர்மா, கனடாவின் ஹாலிஃபாக்ஸில் நடைபெற்ற 65வது காமன்வெல்த் பாராளுமன்றச் சங்க மாநாட்டில், பாராளுமன்றச் சங்க மாநாட்டின் (CPA) சர்வதேசப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான சர்வதேசப் பாராளுமன்றச் சங்கத்தில் இடம் பெறும் இரண்டாவது இந்திய அதிகாரியாக சர்மா பொறுப்பினை ஏற்றுள்ளார்.
காமன்வெல்த் பாராளுமன்றச் சங்கமானது (CPA) 1911 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது காமன்வெல்த் அமைப்பின் 55 உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட தேசிய, மாநில, மாகாண மற்றும் பிராந்தியப் பாராளுமன்றங்கள் மற்றும் சட்டமன்றங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களை அதன் வலையமைப்பின் மூலம் ஒன்றிணைக்கிறது.