பீகார் மாநில அரசானது, பாட்னா மாநகராட்சிப் பகுதியில் 15 தினங்களுக்கு மீன்களின் விற்பனை, போக்குவரத்து மற்றும் இருப்பு ஆகியவற்றுக்குத் தடை விதித்திருக்கின்றது.
மீன் மாதிரிகளில் பார்மலின், ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் ஆகியவற்றின் துணுக்குகள் அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்ட பிறகு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை 2006-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயங்கள் சட்டத்தின்படி விதிக்கப்பட்டிருக்கின்றன.
வழக்கமான வரம்பிற்கு அப்பால் பார்மலின் மற்றும் இதர கனமான உலோகங்களின் பயன்பாடு நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, மஞ்சள் காமாலை மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்தும்.