TNPSC Thervupettagam

பார்வைத் திறனிழப்புத் தடுப்பு வாரம் 2023 - ஏப்ரல் 01/07

April 8 , 2023 504 days 175 0
  • இந்திய அரசானது, பார்வைத் திறனிழப்பிற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஒவ்வோர்  ஆண்டும் ஏப்ரல் 01 முதல் 07 ஆம் தேதி வரை பார்வைத் திறனிழப்புத் தடுப்பு வாரத்தினை அனுசரிக்கிறது.
  • இந்த வருடாந்திர நிகழ்வானது, பார்வைக் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு ஆதரவு அளித்தல் மற்றும் கண் பராமரிப்பு நலச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தச் செய்தல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சரான ராஜ் குமாரி அம்ரித் கவுர் ஆகியோர் தேசியப் பார்வைத் திறனிழப்புத் தடுப்பு சங்கத்தினை நிறுவினர்.
  • ஒரு வார கால அளவிலான இந்த அனுசரிப்பு நிகழ்வானது 1960 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்