பார்வையின்மைத் தடுப்பு வாரம் 2019 - ஏப்ரல் 01 முதல் 07
April 8 , 2019 2000 days 469 0
பார்வையின்மைத் தடுப்பு வாரமானது ஏப்ரல் 1 (திங்கள்) முதல் ஏப்ரல் 7 (ஞாயிறு) வரை கடைபிடிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரமானது பார்வையற்றோர் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இந்திய அரசால் திட்டமிடப்பட்டதாகும்.
இது முதன்முதலில் 1960 ஆண்டில் ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோரால் 1860 ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
“விஷன் 2020: பார்வைக்கான உரிமை” எனும் மற்றொருப் பிரச்சாரமானது 1999 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தால் பார்வையின்மையைத் தடுப்பதற்காக தொடங்கப்பட்டது.