14 ஆண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனம் 2021 ஆம் ஆண்டில் அதன் முதல் தேசிய தேர்தலை நடத்த உள்ளது.
பாராளுமன்றம், அதிபர் மற்றும் தேசிய மன்றத் தேர்தல்கள் ஆகிய மூன்று தேர்தல்களும் பாலஸ்தீனத்தில் 2021 ஆம் ஆண்டில் நடத்தப்படும்.
2007 ஆம் ஆண்டில் ஹமாஸ் ஆனது காசா பகுதியை கைப்பற்றியதிலிருந்து ஹமாஸ் மற்றும் ஃபத்தா ஆகிய இரண்டு பாலஸ்தீனியக் குழுக்களும் ஒருவருக்கொருவர் எதிராக இருந்து வருகின்றன.
இருப்பினும், 2020 ஆம் ஆண்டின் செப்டம்பரில், இரு குழுக்களும் துருக்கியில் சந்தித்து பாராளுமன்றம் மற்றும் அதிபர் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்த ஒப்புக் கொண்டன.
அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அடுத்த தேர்தல் வரை பாலஸ்தீன அதிபராக இருக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவர் மேற்குக் கரைப் பகுதியில் மட்டுமே அதிபராக அங்கீகரிக்கப் படுகிறார், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியால் அல்ல.
பாலஸ்தீனத்தின் முதல் பாராளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்கள் 1996 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டன.
பாலஸ்தீனிய தேசிய ஆணையமானது ஃபத்தா என்ற கட்சி ஆதிக்கம் செலுத்தும் விதத்தில் ஒரு பல கட்சி முறையைக் கொண்டுள்ளது.