TNPSC Thervupettagam

பாலஸ்தீன மக்களுடனான ஒற்றுமைக்கான சர்வதேச தினம் - நவம்பர் 29

November 29 , 2023 234 days 157 0
  • 1947 ஆம் ஆண்டில் இத்தினத்தில், பாலஸ்தீனப் பிரிவினை குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.
  • 1977 ஆம் ஆண்டில், பொதுச் சபை இந்த நாளை ஆண்டுதோறும் கடைப்பிடிப்பதற்கான அழைப்பினை விடுத்தது.
  • 1948 ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரின் போது நடந்த பாலஸ்தீனிய நக்பா (பேரழிவு) நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஐக்கிய நாடுகள் பொது சபை ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்தது.
  • இந்தக் காலத்தில் பாலஸ்தீனிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப் பட்டனர் அல்லது வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக மாறினர்.
  • நக்பாவிற்கு முன் பாலஸ்தீனம் பல இன மற்றும் பல கலாச்சாரச் சமூகமாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டு பாலஸ்தீனிய நக்பாவின் 75வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்