TNPSC Thervupettagam

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு தினம் – டிசம்பர் 17

December 18 , 2017 2478 days 930 0
  • பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 17ம் தேதியன்று பாலியல் தொழிலாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும்  அவர்களது கூட்டாளிகளால் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினம்
    • உலகம் முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் வெறுக்கத்தக்க குற்றங்கள்
    • தங்கள் சார்ந்த சமுதாயத்தில் காட்டப்படும் வேறுபாடுகள் மற்றும் அவர்கள் மீது வன்முறை செலுத்துவதற்கு காரணமாக உள்ள  சமூகக் களங்கத்தையும் பாரபட்சத்தையும் நீக்குவதற்கான தேவைகள்
       ஆகியவற்றை பற்றி கவனம் செலுத்துகிறது.
  • முதன் முதலில் 2003-ல் அனுசரிக்கப்பட்ட இத்தினம் டாக்டர் அன்னி ஸ்பிரிங்கிள் மற்றும் அமெரிக்காவின் பாலியல் தொழிலாளர்களுக்கான உரிமைகள் நலச் சங்கமான செக்ஸ் வொர்க்கர்ஸ் அவுட்ரீச் புராஜக்ட், யுஎஸ்ஏ (Swop-USA) ஆகியோரால் நிறுவப்பட்டது.
  • 2005-ல் ஐரோப்பாவின் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான சர்வதேசக் குழு சிவப்பு குடையை பாகுபாட்டின் எதிர்ப்புக்கான குறியீடாக ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்