இந்தியக் கட்டிடக்கலை நிபுணர் B.V. தோஷி தனது 95வது வயதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காலமானார்.
லீ கோர்புசியரிடம் பயிற்சி பெற்ற இவர், பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு பெற்ற ஒரே இந்தியர் ஆவார்.
இவர் இந்திய நவீனக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆவார்.
2022 ஆம் ஆண்டில் இவர் பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்களின் ராயல் நிறுவனம் வழங்கிய தங்கப் பதக்கத்தை வென்றார்.
தோஷி அவர்கள், அகமதாபாத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் திட்டமிடல் சார் தொழில்நுட்ப மையம் (CEPT) மற்றும் மகாத்மா காந்தி தொழிலாளர் நிறுவனம் ஆகியவற்றின் கட்டிடங்களை வடிவமைப்பதில் புகழ் பெற்றவர் ஆவார்.