2022 ஆம் ஆண்டில், 'சக்தி திட்டத்தின்' துணைத் திட்டமான 'சாமர்த்யா' திட்டத்தின் கீழ், முந்தையத் தேசியக் குழந்தைகள் காப்பகத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு பால்னா திட்டம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு மிக விரிவான பராமரிப்புச் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சேவைகள் போஷான் 2.0 என்ற திட்டத்துடன் இணைந்து குழந்தைப் பருவப் பராமரிப்பு, வளர்ப்பு மற்றும் ஊட்டச்சத்தை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
பால்னா திட்டத்தின் மூலம் பகல்நேரக் காப்பக வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.