இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா தெஹாரியா என்பவர் ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலைச் சிகரமான கோசியஸ்ஸ்கோ என்ற மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரம் மற்றும் கிளிமஞ்சாரோ ஆகிய மலைகளின் உச்சியை அடைந்து சாதனை படைத்தார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் மலையேறுவதற்குத் தன்னை ஆதரித்து ஊக்கப்படுத்திய அம்மாநில முதல்வரான கமல்நாத் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.