பித்தர்கனிகா தேசியப் பூங்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட உப்பு நீர் முதலைகளின் கணக்கெடுப்பின்படி, 2018 ஆம் ஆண்டில் 1,742 ஆக இருந்ததை விட அவற்றின் எண்ணிக்கையானது தற்போது 1,757 ஆக உயர்ந்துள்ளது.
இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்டுள்ள சிவப்புப் பட்டியலில் குறைந்த அபாயம் கொண்ட உயிரினங்களாகப் பட்டியலிடப் பட்டுள்ளன.
இந்தப் பூங்காவானது 2002 ஆம் ஆண்டில் ராம்சார் ஒப்பந்தத்தில் இடம்பெறும் நிலையைப் பெற்றது.
சிலிக்கா ஏரிக்கு அடுத்ததாக இந்த நிலையை அடைந்த இரண்டாவது இந்தியப் பகுதியாக இந்தப் பூங்கா கருதப்படுகின்றது.
இந்தப் பூங்காவானது இந்தியாவின் இரண்டாவது பெரிய சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்பாகும்.