TNPSC Thervupettagam

பிரகதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு

February 6 , 2020 1627 days 786 0
  • 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழா நடைபெற்றது.
  • உலகின் மிகப்பெரிய மற்றும் சிறப்பு வாய்ந்த பிரகதீஸ்வரர் கோவிலானது கி.பி 1003 மற்றும் கி.பி 1010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சோழப் பேரரசரான முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014) என்பவரால் கட்டப்பட்டது.
  • கடைசியாக இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழாவானது 1997 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • மதராஸ் உயர்நீதிமன்றமானது இந்தக் கோவிலின் குடமுழுக்கை ஆகம விதிப்படி நடத்த வேண்டும் என்றும் மந்திரங்களை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கூற வேண்டும் உத்தரவிட்டுள்ளது. 
  • இந்தக் குடமுழுக்கின் போது ஓதுவார்களைக் கொண்ட ஒரு குழுவானது தேவாரம், திருவாசகம், திருமுறை போன்ற பிற தமிழ் மந்திரங்களைக் கூற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இம்மாதிரியாக தமிழில் குடமுழுக்கு செய்யப் படுவது இந்தக் கோவிலில் இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்