பிரசார் பாரதி நிறுவனமானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று தனது வெள்ளி விழா அல்லது அது உருவாக்கப்பட்ட 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பாராளுமன்றமானது பிரசார் பாரதி (இந்திய ஒலிபரப்புக் கழகம்) சட்டத்தை நிறைவேற்றியது.
1997 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், ஒரு சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வத் தன்னாட்சி அமைப்பாக இது உருவாக்கப்பட்டது.
இது தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவற்றினை உள்ளடக்கியது.