TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ராக்ஷன் அபியான் (PM - AASHA)

September 13 , 2018 2140 days 1134 0
  • புதிய தலைமைத் திட்டமான “பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ராக்சன் அபியான்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது (PM - AASHA - Pradhan Mantri Annadata Aay Sanrakshan Abhiyan).
  • இத்திட்டத்தின் நோக்கம் 2018ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளவாறு விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கு ஏற்ற விலையை உறுதி செய்வதாகும்.
  • இந்தத் தலைமைத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்ற விலையை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறை அடங்கியுள்ளது. அவையாவன
    • விலை ஆதாரத் திட்டம்
    • விலை பற்றாக்குறை பண வழங்கீடு திட்டம்
    • தனியார் கொள்முதல் மற்றும் இருப்பிற்கான சோதனைத் திட்டம்
  • மத்திய உணவு மற்றும் பொது வழங்கீடுகள் துறை (DFPD - Department of food and Public Distribution) மற்றும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் பருத்தி மற்றும் சணல் ஆகியவற்றிற்கு ஆதரவு விலை அளிப்பதற்கான மற்ற திட்டங்கள் தொடரும் என்று மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்